search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு அரசு பள்ளி மாணவன்"

    கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவனின் நேர்மையை பாராட்டி பலர் உதவி செய்ய முன்வந்தாலும் ரஜினியை பார்ப்பது தான் எனது விருப்பம் என அவர் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு கனி ராவுத்தர் குளம் நந்தவனதோட்டம் பகுதியை சேர்ந்த பாட்ஷா என்ற துணி வியாபாரியின் மகனான முகமது யாசின் தற்போது சின்ன சேமூர் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    பள்ளியின் அருகே ரோட்டில் 500 ரூபாய் பணம் கட்டு கிடந்ததைப் பார்த்த முகமது யாசின், அதை எடுத்து ஆசிரியையிடம் ஒப்படைக்க ஆசிரியை வழியாக அந்தப் பணம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றது.

    ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த முகமது யாசின் நினைத்திருந்தால் அந்தப் பணத்தை எடுத்துச் சென்று குடும்பத்தினரிடம் கொடுத்து செலவு செய்திருக்கலாம்.

    ஆனால் பெற்றோரால் நேர்மையாக வளர்க்கப்பட்ட முகமது யாசின் அந்தப் பணத்தை எடுத்து கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் கூறியது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

    இந்த அற்புதமான செயலே முகமது யாசினை தற்போது ஈரோடு மக்கள் அனைவரும் அறியும் ‘ரியல் ஹீரோ’வாக மாற்றி விட்டது. அவரது இந்த நேர்மையான செயலுக்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் பாராட்டு குவிகிறது.

    பலரும் அவருக்கு உதவ தயார் ஆனார்கள். ஆனால் அதிலும் பெருந்தன்மை காட்டி அந்த உதவிகளை ஏற்காமல் உதவி செய்வதாக கூறியவர்களுக்கு நன்றியை மட்டும் தெரிவிக்கிறார்கள் முகமது யாசினும், அவரது பெற்றோரும்.

    எனினும் முகமது யாசின் நேர்மைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. ஈரோடு நகரவாசிகள் மட்டுமல்லாது பத்திரிகைகளிலும், மீடியாக்களிலும், சமூக வலைத்தளங்களிலும் முகமது யாசினின் நேர்மையை பார்த்த சினிமா பிரபலங்களும் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்

    நடிகை குஷ்பு தனது மானேஜர் மூலமாக ஈரோட்டுக்கு தொடர்பு கொண்டு மாணவனின் பெற்றோரிடம் செல்போனில் பேசினார். "உங்கள் மகனின் நேர்மை மகத்தானது. அவனது படிப்பு செலவுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.

    ஆனால் முகமது யாசினின் பெற்றோரோ, "நீங்கள் உதவி செய்ததாக கூறியதற்கு நன்றி" என்று மட்டும் கூறி எந்த பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் பதில் அளித்தனர். அதற்கும் நடிகை குஷ்பு பாராட்டு தெரிவித்து அந்த மாணவனிடமும் பேசி தனது வாழ்த்துக்களை கூறினார் நடிகர் எஸ்.வி. சேகரும் மாணவனின் நேர்மையை பாராட்டி உள்ளார்.

    இந்த நிலையில் ஈரோடு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மாணவர் முகமது யாசின் நேர்மையை பாராட்ட அவரது வீடு தேடிச் சென்றனர். ரஜினி மக்கள் மன்ற ஈரோடு மாவட்ட செயலாளர் சாம்ராஜ் தலைமையில் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் பைக்கே. முருகேஸ், 1-ம் மண்டல இணை செயலாளர் வெங்கட ரமணா, 2-ம் மண்டல இணை செயலாளர் ராஜ் பூவை சுரேஷ், 3-ம் மண்டல செயலாளர் குணசேகரன், இணை செயலாளர் மோகன் ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் சங்கர், 3-ம் மண்டல இணை இளைஞர் அணி செயலாளர் சின்னையன், இணை செயலாளர் சந்தோஷ் ஆகியோர் முகமது யாசின் வீட்டுக்கு சென்றனர்.

    மாணவர் முகமது யாசினை ஈரோடு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சாம்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.

    மாணவர் முகமது யாசினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. முகமது யாசினினிடம் ரஜினி மக்கள் மன்ற ஈரோடு மாவட்ட செயலாளர் சாம்ராஜ், ‘‘தம்பி... நேர்மையாக பணத்தை எடுத்துக் கொடுத்த உனக்கு என்ன வேண்டும்? நாங்கள் என்ன உதவி செய்ய வேண்டும்?’’ என்று கேட்டார்.

    அதற்கு முகமது யாசின், "எனக்கு உதவி வேண்டாம். நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவரை நான் சந்திக்க விரும்புகிறேன்" என்றான் குழந்தை குரலில். அவரது தந்தை பாட்ஷா, ‘‘நீங்கள் எனது மகனுக்கு உதவி செய்வதாக கூறியதற்கு நன்றி. இப்போது அவன் அரசு பள்ளியில் தான் படிக்கிறான். அவனது படிப்பு செலவுக்கு பணம் இப்போது தேவைப்படவில்லை.

    உதவி செய்வதாகக் கூறும் நீங்கள் எனது மகன் விருப்பப்படி ரஜினியை சந்திக்க ஏற்பாடு செய்தால் மகிழ்ச்சி அடைவோம்’’ என்று கூறினார்.

    இதைக் கேட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் சாம்ராஜ், ‘‘ரஜினி சாரை பார்க்க ஆசைப்படும் உங்கள் மகன் ரஜினி சாரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். அவரை சந்திக்கும் தேதி கேட்டு உங்களிடம் சொல்கிறேன். அப்போது உங்களையும், உங்கள் மகனையும் அழைத்து செல்கிறோம்’’ என்று கூறினார்.

    முகமது யாசின் தந்தை கூறும்போது, எனது மகன் மேற்படிப்பு படிக்கும் போது வேண்டுமானால் உதவி தேவைப்படும் என்று கூறினார். அதற்கு பதிலளித்த ஈரோடு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சாம்ராஜ், ‘‘உங்கள் மகன் மேற்படிப்பு படிக்கும்போது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள். நாங்கள் கண்டிப்பாக உதவி செய்கிறோம்’’ என்று கூறினார்.

    ஈரோட்டில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து எஸ்.பி.யிடம் கொடுத்த அரசு பள்ளி மாணவனை தொடர்பு கொண்டு நடிகை குஷ்பு பாராட்டினார்.
    ஈரோடு:

    ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்து உரியவரிடம் ஒப்படைக்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்த மாணவர் முகமது யாசினை பலரும் பாராட்டி வருகிறார்கள். சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

    இதை பார்த்த நடிகை குஷ்பு தனது மானேஜர் மூலமாக ஈரோட்டுக்கு தொடர்பு கொண்டு மாணவனின் பெற்றோரிடம் செல்போனில் பேசினார். உங்கள் மகனின் நேர்மை மகத்தானது. அவனுக்கு படிப்பு செலவுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். எவ்வளவு பணம் வேண்டும்? என்று கேட்டார்.

    அதற்கு மாணவனின் தந்தை பாட்ஷா ‘‘என் மகனை அரசு பள்ளியில்தான் சேர்த்துள்ளேன். அவனது படிப்பு செலவுக்கு பணம் தேவைப்படாது. அவனை தொடர்ந்து அரசு பள்ளியில்தான் படிக்க வைக்க விரும்புகிறேன். உதவி செய்வதாக கூறிய உங்களுக்கு நன்றி’’ என்று கூறினார்.



    எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காத மாணவனின் பெற்றோருக்கு குஷ்பு மீண்டும் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார். மேலும் மாணவன் முகமது யாசினுடனும் போனில் பேசி அவனையும் பாராட்டி வாழ்த்து கூறினார்.

    மாணவனின் தந்தை பாட்ஷா சைக்கிளில் துண்டு, லுங்கி போன்ற துணிகளை எடுத்து சென்று விற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    ஈரோட்டில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து எஸ்.பி.யிடம் கொடுத்த அரசு பள்ளி மாணவனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
    ஈரோடு:

    ஈரோடு கனிராவுத்தர் குளம் நந்தவன தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா, ஜவுளி வியாபாரி இவரது 2-வது மகன் முகமது யாசின் (வயது 7).

    சின்னசேமூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். வழக்கம் போல் சிறுவன் முகமது யாசின் பள்ளிக்கு சென்றான்.

    பள்ளியில் பகல் 11 மணியளவில் இடைவெளி சமயத்தில் வெளியே வந்த மாணவன் கண்ணில் ரோட்டில் 500 ரூபாய் கொண்ட பணம் கட்டு கிடந்தது தெரிய வந்தது.

    பணக்கட்டை எடுத்த மாணவன் தனது வகுப்பறைக்கு சென்று தனது ஆசிரியை ஜெயந்தி பாயிடம் ஒப்படைத்தார்.

    “டீச்சர் இந்த பணக்கட்டு ரோட்டில் கிடந்தது. யார் தவறவிட்டு சென்றார்களோ.. தெரியவில்லை” என்று கூறினான்.

    அந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் ரூ.50 ஆயிரம் இருந்தது. பிறகு அரசு பள்ளியின் ஏற்பாட்டின்படி மாணவன் முகமது யாசினை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு மாணவன் எஸ்.பி.சக்திகணேசனிடம் “சார் இந்த பணம் கீழே கிடந்தது உரியவரிடம் ஒப்படையுங்கள்” என்று கூறி பணக்கட்டை எஸ்.பி.யிடம் ஒப்படைத்தான்.

     மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று பணத்தை ஒப்படைத்த மாணவர் முகமது யாசினை எஸ்.பி.சக்தி கணேசன் பாராட்டி அவனிடம் பேசிய காட்சி.

    மாணவரின் நேர்மையை கண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் வெகுவாக பாராட்டினார். மேலும் மாணவனுக்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலேயே பாராட்டு விழாவும் நடத்தினார். அதோடு அல்லாமல் மாணவரின் அண்ணன் முகமது ஜமில் (13) அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறான். அவனையும் எஸ்.பி. அலுவலகத்துக்கு வரவழைத்தார்.

    அண்ணன்-தம்பி இருவருக்கும் சீருடை, புத்தகப்பை மற்றும் ஷூ போன்ற பொருட்களையும் வழங்கி பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.

    மாணவனின் நேர்மையை அவன் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவ- மாணவிகள் பாராட்டினர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் இன்று மாலைமலர் நிருபரிடம் கூறும்போது, “பள்ளி மாணவனின் நேர்மை எண்ணை வியக்க வைத்தது. மாணவன் ஒப்படைத்த ரூ.50 ஆயிரத்துக்கு உரிமை கோரி ஒருவர் என்னிடம் வந்தார். அவரை இன்று மாலை வரவைத்துள்ளேன்.

    அடையாளம் கேட்டு இது அவரது பணம்தானா? என்று உறுதி செய்யப்பட்ட பிறகு பணத்தை அவரிடம் ஒப்படைப்போம் என்று கூறினார். 
    ×